இப்படிக்கு, காதல்!!
"என்ன நினைத்துக் கிடப்பாளோ என்றிங்கு நான் ஏங்க,
என்னைத்தான் நினைத்திருப்பான் என்றவள் அங்கு சுகிக்க,
பார்த்தவிடத்தில் எல்லாம், இனி என்று பார்த்திடுவோம் என்று இரு புருவமுயர்த்தி வினவ,
தெரியாது என்று அவள் அழகாய் உதடு பிதுக்கிக் கண் சுருக்க,
ஆசையாய் மீண்டுமொரு சந்திப்பின் அரங்கேற்றங்களை மனக்கண்ணில் படம்பிடித்து,
அடுத்த வாய்ப்பான அந்த மந்திரத்திருநாள் நோக்கித் தவம் கிடக்க,
மீண்டும் ஒட்டி வந்தபோது கண்நோக்கிப் பேசத் தோன்றிடாது ,
பதைபதைத்து நின்ற அந்தப்பொற்காலம் இனி எப்போழுது!!
இந்தக் கால இளவட்டங்களிடத்தில் , இத்தனை சுகங்களும், அலைபேசிச் சூட்டில் சுருங்கித்தான் போனது,
காதலுக்கு முகநூலும் வாட்சப்பும் வரம் மட்டும் அல்ல என்பது நிச்சயமான உண்மை.
இந்த அலைபேசிக் களேபரங்களில்லாமல் போன அந்தக்காலங்களில் வாழ்ந்தை என் திருச்சிக் காதலும் சுகமானதே!!
காதலர் தின வாழ்த்துக்கள்
- குருப்ரம்மா
No comments:
Post a Comment