Thursday, January 5, 2017

!!க்லோபலிசைசேஷன்!!

இன்னைக்கு இசைப்புயல், இந்தியாவோட ஐகான், அல்லா ரெக்கா ரெஹ்மானுக்கு பிறந்தநாள்.

நம்ம புயல் இருக்காப்லையே, அவரை ரொம்ப ரொம்ப பிடிக்க காரணமாக இருந்த படம் 'டூயட்". ஃப்யூஷனை கையாளத்தெரிஞ்ச வெகுசில பேர்ல, புயலும் ஒருத்தர். Sax அப்படிங்கற இசைக்கருவி, கர்னாடக சங்கீதத்துக்குன்னே டிசைன் செய்து படைக்கப்பட்ட ஒன்னு!! அதை கைல எடுத்து, மெட்டுப்போடு, என் காதலே என் காதலின்னு இரண்டு பாடல்களோட உயிரோட்டமா அதைக்கொடுத்து, டிஜிட்டல் டிமனா தன்னை பிரம்மாண்டமா காமிச்சு, மத்தவங்கள திரும்பிப்பாக்க வச்சாப்ல.

அது மட்டுமா?? பாட்டுக்குள்ள ஸ்வரங்கள கோர்வையா கொண்டு வந்து, அதை நவீன இசைல புகுத்தற வித்தை, ஞானிக்கும் , புயலுக்கும் அத்துப்படி. அவரு கூட்டத்திலே கோயில்புறால, இவரு மெட்டுப்போடுல.. கேட்டாலே புல்லறிக்கும். கேட்டுப்பாருங்க..

அலைபாயுதேல "மாங்கல்யம் தந்துனானேனால "ஆரம்பிச்சு, "என்றென்றும் புன்னகைல" தொடர்ந்து, கேக்கற அத்தனை பேரு முகத்துலையும் புன்னகை இழையோட விட்டுருப்பாப்ல.

இந்தியன்னு படம், சேனாதிபதி, விடுதலை போருக்காக கிளம்புவாப்ல, அப்போ சுகன்யாக்கா தடுத்து எப்போ வருவிங்கன்னு கேக்கும். இரு ஆத்தான்னு சொல்லி கைல கொஞ்சம் குங்குமத்த அள்ளிக்கொடுத்துட்டு, நெத்தில பொட்டும் வைப்பாப்ல, சீனே சோகத்துல வயித்தப்பொறட்டும், திடீர்னு ஒரு ஷெனாய் எடுத்துட்டு வந்து கலங்கடிச்சுருப்பாப்ல நம்ம புயலார். அந்த ஷெனாய் பீசு இதோ..

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட க்ளைமேக்ஸ்ல என்ன சொல்லப்போகிறாயவும், கல்யாண கெட்டிமேளத்தையும் மிக்சில போட்டு அடிச்சு விருந்து வச்சிருப்பாரு. ட்ரிக்சான மூசிக் அது!! தலைக்கு தில்ல பாத்தியா??

ஹீப்ரிஷ் க்றிஸ்டியானிட்டிக்கும், நாதஸ்வரத்துக்கும் என்னய்யா சம்பந்தம் "
அன்பில் அவன்னு " ஒரு பாட்டு, விண்ணைத்தாண்டி வருவாயா படம். கேட்டிங்கன்னா அந்த சிங்க் புரியும்.. என்ன ஒரு மூளைப்பா. சாமி..

அதே படத்துல ஓமனப்பெண்ணே, கல்யாணிமேன்னோட பேஸ் குரலோட க்ளாசிக்கல் வோக்கல் கார்டுக்கு டிஜிட்டலைசுடு அவுட்ஃபிட் மாட்டி அழகுபாத்துருப்பாரு!!

ஸ்லம் டாக் மில்லியனர், இந்த இசைக்குழந்தையோட சாதனைக்கு பரிசா  ரெண்டு ஆஸ்கர் பொம்மைகள பரிசா தந்த படம், "Mausam and Escape" பிட்ல, க்ளாசிக்கல் சித்தாரோட பேஸ் கிட்டார் பிசைஞ்சு ஊட்டி, வயிறும் மனசும் நிறைய விட்டுருப்பாப்ல..

இது போக, ரிதம், ரோஜா.. நான் அடிக்கடி லயிக்கற இசை கோர்வை.. ரிதம்ல கடைசியா அந்த பையன் ஊரை விட்டுப் போர் அர்ஜுன பாக்க வரப்போ ட்ராஃபிக்ல பஸ் மாட்டிக்கும்.. அந்த தவிப்ப நமக்குள்ளையும் வயலின் கம் கிட்டார் மூலமாக புகுத்தி பின்னிருப்பாப்ல!!

ஜோதா அக்பர், ராக்ஸ்டார், ரங்கீலா, ஹிந்தில நான் ரொம்ப ரசிச்ச இவரோட பின்னணி இசை உள்ள படங்கள். எல்லாத்துக்கும் மேல மணிமகுடமா "வந்தே மாதரம்". ப்பா!!
அவரோட கோர்வைகள் ஆயிரக்கணக்குல இருக்கு. எழுதினா இருபத்தி அஞ்சு ட்விட்டர், பத்து ஃபேஸ்புக்கு தேவைப்படும்.

புதுப்புது பின்னணிப் பாடகர்கள அறிமுகம் செய்யறாரு. இதில்லாம KM music observatoryன்னு ஒரு காலேஜ் ஆரம்பிச்சு புது இசைய சொல்லித்தராப்ல. தலைக்கனம் இல்லாத மனிதர்.  நல்லாருங்கய்யா.

இசைங்கறது மக்குப்பயகூட பல்லக்காட்டிட்டே கேக்கற ஓரு சமாச்சாரம். உலக இசை மேதைகள்லாம் திரும்பிப் பாக்க வைக்கற இசையமைப்பாளர்கள் வாழ்ந்த ஒரு எரால நானும் இருந்தேன்னு சொல்லிக்கறது பெருமை. அந்த வகைல இவர் எனக்கு ரொம்பவே நெருக்கமானவர்.  கொடுத்துட்டே இருங்க, சாப்பிட்டுட்டே இருக்கோம். வேண்டாம்னு சொல்லவே மாட்டோம்.

ஒரு தெய்வம் தந்த பூவே!! ரெஹ்மானே!! வாழ்க வளமுடன் சார்!! நாதமும், ஸ்வரமும் உள்ள காலம் வரை, நீடூழி வாழ்க!!

குருப்ரம்மா

No comments:

Post a Comment