எங்களது உறுதிமொழி!!
அறக் கயிறுகளை தனக்குத் தானே கட்டிக்கொண்டு,
ஆண்மையதின் பொருளதனை நன்குணர்ந்து,
குலம் பேசப் பல பெருமைகளீட்டுவதாய்,
உளமாற உறுதி பூண்டு,
வீரமதன் விளைநிலமாம் தமிழகத்தின்,
தீரமது பெண்மையைப் போற்றுதலாம் என்பதறிந்த,
இளைஞர் படை இன்றெங்கள் முன்னிற்கிறது!!
மென்மையுடைத் தமிழ் மாதர்குலமே பெருமைகொள்
உன் பெண்மை காத்திட இங்கு கோடி ஆண்கள் துணையுண்டு!!
இனி என் தமிழ்த்திருநாட்டில்
"பயிர்களை வேலிகள் மேயாது,
பெண் உயிர்களை ஆணினம் வதைக்காது"
- குருப்ரம்மா-
No comments:
Post a Comment