சோலைப் பூக்களின் சாயலில் உன்முகம்,
மனதிலே பதியுதே, உன்னிடம் பணியுதே,
பூவையுன் நினைவிலே நான் வாழும் காலமே,
கறையுதே, குறையுதே, நொடிகளும் இறுகுதே !!
உன்னைக் காணாமல் என் கண்கள் நோகுமென்றால்,
என்னைச் சேராமல் உன் உயிர் வாடுமடி,
யாருமில்லாத தீவொன்றில் வாழ்வதுபோல்,
நீயும் இல்லா என் நாட்களும் தேம்புதடி!!
என்னையும் தேற்றவே , இங்கு நீ தேவையே,
ஓடிவா, ஓடிவா என்னிடம் ஓடிவா!!
(சோலைப் பூக்களின் சாயலில் உன்முகம்,
மனதிலே பதியுதே, உன்னிடம் பணியுதே,
பூவையுன் நினைவிலே நான் வாழும் காலமே,
கறையுதே, குறையுதே, நொடிகளும் இறுகுதே !! )
நீயும் இல்லாத நானிங்கு பாதியென்பேன்
எந்தன் வாழ்வின் ஆதாரம் நீ மீதியென்பேன்,
ஓடும் நம் காலம் வேறாகிப் போகுமென்றால்,
வாடும் பயிராக உன் முன்னே உதிர்ந்திடுவேன்!!
தேடலின் சுகத்திலே, காதலும் விளங்குதே
தேடிவா, தேடிவா சீக்கிரம் தேடிவா!!
(சோலைப் பூக்களின் சாயலில் உன்முகம்,
மனதிலே பதியுதே, உன்னிடம் பணியுதே,
பூவையுன் நினைவிலே நான் வாழும் காலமே,
கறையுதே, குறையுதே, நொடிகளும் இறுகுதே !! )
- குருப்ரம்மா -
No comments:
Post a Comment