Friday, January 27, 2017

!!மாத்தி யோசி!!

நம்ம நாட்ல கிண்டலுக்கு ஆளாகறவங்க பட்டியல் நீண்டுட்டேதான் போகுது. அன்று அரசியல்வாதிகள், சினிமாத்துறையினர் இன்று காவல்துறையினர். தப்போ ரைட்டோ, பிடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கித் தள்ளிட்டுருக்கோம். சிக்கின எல்லாரையுமே சிதைச்சு அனுப்பறோம். இது பெருமைப் படக்கூடிய விஷயங்களான்னு பாத்தா. லேசா முட்டுது.

இன்னைக்கு நாம எழுதற ஒவ்வொரு விஷயமும், நம்முடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் பாத்து பெருமைப்பட்டுக்குவாங்களா? அட்லீஸ்ட் நாம முன்னிறுத்தின கொள்கைகள் வலியுறுத்தப்படுமா? நம்மோட இந்த புரட்சியை நாளைய தலைமுறையினரும் கொண்டாடுவாங்களா? மையக்கருத்து அவங்களுக்குப் போயி சேருமா?
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.!!

எங்கப்பா அம்மா ஒரு இனத்துக்கான போராட்டத்துல, ஒரு தமிழனா நின்னு குரல் கொடுத்தாங்க. பல துரோகங்களைத் தாண்டி அந்தப்போராட்டம் ஜெயிச்சுதுன்னு வரப்போற தலைமுறைய சொல்லிக்க வச்சுருக்கோம். ஆனா ரெண்டு மூணுநாளா, அதையும் தாண்டின வெறுப்பும், இழிவுகளும், வசவுகளுமே சமூக வலைத்தளங்கள ஆக்கிரமிச்சுருக்கு. துரோகங்கள மீறி ஜெயச்சோம்னு மார்தட்டிக்க வேண்டிய இந்த நேரத்துல, துரோகிகள ட்ரெண்டாக்கி விடற இந்த நிலை தேவையான்னு யோசிச்சா, இல்லைன்னே தோணுது.

கொடிகாத்த குமரந்தான் நின்னாப்ல, அவரை அடிச்ச ஒரு போலீஸ்காரன் பேரும் நமக்கு தெரியாதில்லையா. அதே போல நாமதான் நம்ம வரலாறுகள்ல தலையங்கமா இருக்கனுமே தவிற, துரோகிகளுக்கு இடமே கொடுக்கக் கூடாதுங்கறது என்னோட விண்ணப்பம்.

எழுதறது என் இஷ்டம் , நீ யாருய்யா கோமாளின்னு டக்குன்னு தலைப்பாவ கட்டாதிங்க. என்னோட தடத்தை விட்டுட்டுப் போகனும்னு நான் நினைக்கறேன். சுதந்திரப்போராட்டம் எப்படி இருந்துருக்கும்னு, இந்தப் போராட்டம் ஒரு முன்னோட்டம் காமிச்சுட்டுப் போயிருக்குது. இன்றைய போராளிகள், நாளைய தலைவர்களா சித்தரிக்கப் படனும்ங்கற ஆசை எனக்கு இருக்கு. அதில வேற எந்த அந்நியர்களுக்கும் இடம் கொடுத்துடாதிங்கன்னு கேட்டுக்கவே இந்தக்கட்டுரை.

துரோகங்கள் சுட்டிக்காட்டப்படலாம், துரோகிகளை தூக்கி விடவேண்டாம். துஷ்டனைக் கண்டால், தள்ளிவிட்டுட்டு முன்னேறிப் போயிக்கிட்டே இருப்பமே என்ன இப்போ!!

வாழ்க தமிழ்!!

- குருப்ரம்மா -

No comments:

Post a Comment