Tuesday, December 20, 2016

!!வயலினும் வசியமும்!!

 சக ராஜரசிகர்களுக்கான பதிவு, "சக ராஜரசிகர்கள்" புரிஞ்சுருக்கும்னு நினைக்கறேன்.



அவர் பாட்டை எடுத்து அதோட டீட்டெய்லிங் பேசினோம்னா லோடு லோடா கொட்டலாம்யா.. ராஜா சார்லாம், ஜிகா பைட் க்லௌவ்டு டெக்ஸ்ட்டிங் ரேஞ்ச் தாண்டிப்போற அளவு சரக்கிருக்கற பொக்கிஷக் கிடங்கு. அவரைப் பத்தி நானென்னத்த சொல்ல, உலகத்துக்கே தெரியுமே..
அவரோட ஆர்க்கெஸ்ட்ரேசன் யுனீக் . எதையும் இசையாக்குவாப்ல. அவர் தொட்ட எல்லாமே துலங்கும்னாலும், அவரோட தெய்வலெவல் எதுன்னு என்னைக்கேட்டா வயலின்னு சொல்லுவேன். வயலின தமிழ்நாட்ல, ஏன் இந்தியாவுலையே ராசய்யா அளவு பயன் படுத்தினது யார்னு யோசிச்சு தலையத்தூக்கிப்பாத்தா, வானந்தான் தெரியுது. வேற ஆரும் தெரியலை.
வயலின, மெயின் ஸ்டேஜ்ல ஏத்தி அவர் சொழட்டி அடிச்ச
How to name it, Madras messiah, அப்புறம் ஆயிரமாயிரம் பாடல்கள் , பின்னணி இசைக்கோர்வைகள்(கல்யாண மாலை, காலம்காலமாக வாழும், நானொரு சிந்து வகையறா) எல்லாம் உலகத்தரம்னு வேர்ல்டுக்கே தெரியும். யார்கண்டா, ஏலியர்கள் கூட இன்னேரம் அதுக்கு மயங்கிக் கெடக்கலாம்.
அப்பேர்ப்பட்ட வயலின, அடக்கி வாசிச்சும் அடிப்பொலியாக்கிருக்காரு ஏகப்பட்ட படங்கள்ல. என்னவோ, அந்த இசைக்கருவி, ஒரு விதமான நெகிழ்ச்சிய ஊள்ளூர உண்டாக்கத் தவறுவதேயில்ல.
கேட்டதுக்காக இரண்டு தங்கங்களப் பத்திப்பாப்போம்..

"ஒரு ஜீவன் அழைத்தது"..

"ரெக்கார்டு தேஞ்சு, கேசட்டு தேஞ்சு, சிடி தேஞ்சு, இப்ப டிவிடியும் தேயற அளவு கேட்டுஞ் சலிக்கல!!
தொடக்கத்துல மூசிக் இல்லாம
"ஒரு ஜீவன் அழைத்தது" ன்னு பாடறாங்க. வாவ்னு நிமிர்ந்து குந்தறோம்.!!
பல்லவி முடியறப்போ,
"இனி எனக்காக அழவேண்டாம்,
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்னு"
தபேலா கீபோர்டு எல்லாத்தையும் துணைக்கு வச்சுக்கிட்டு அந்த அம்மாவுக்கு ஆர்டர் போடறாப்ல, .. எல்லாமே நேர்பேச்சுபோலவே பேசிட்டு,
ஆனா பாருங்க.. இந்த
"உன்னையே எண்ணியே வாழ்கிறேன்" தன்னிலை லவ் விளக்கத்துக்கு மட்டும் நைசா வயலின கூட்டியாந்து நலங்கு வைக்கறாரு .. வயலினோட அந்த சப்போர்ட்ல , வரிகளும் சேர்ந்து கப்புன்னு நெஞ்சே நிறைஞ்சாப்ல ஆகிடும். அப்புறமென்ன லவ்வுதான். ஹீரோக்கு ஹீரோயின் மேலயும், நமக்கு ராஜா மேலயும். பவர் ஆஃப் ஸ்ட்ரிங்ஸ். கேட்டுப்பாருங்க.. அந்த இடத்த உன்னிப்பா கேட்டுப்பாருங்க.
அந்த ஃபீல உள்ள இழுத்து கேட்டுப்பாருங்க. மெய்யாலுமே மெய்சிலிர்க்கும்!!


===================================================================================


அடுத்து "சின்னத்தாயவள்" 
(பாட்டைக் ஹெட்ஃபோனில் கேட்டுட்டே படிச்சா நலம்)
மனசு வெறுத்த சமயங்கள்ல இந்த பாட்டு எங்கையாச்சும் பாடிச்சுன்னா அந்த தெசப்பக்கமே போகாம வேற பக்கமா ஓடிருவேன். சும்மா இல்லைங்க, பவர்ஃபுல் சோகம் அது. புத்திர சோகதாரிகள், குழந்தையில்லாதவங்க இதை கேக்கவே யோசிப்பாங்கன்னு கேள்விப்பட்டுருக்கேன். அய்யோ, கதறவச்சுருப்பாரு நம்ம மொட்டராசா. அந்தப்பாட்டோட பலமே முழுக்க முழுக்க வயலினும் புல்லாங்குழலும். ஆனா ரொம்பத் தெளிவ்வா ஒரு விசயம் யோசிச்சு செஞ்சுருப்பாரு..
பொதுவா, செம்ம காண்டாகி, வெறுத்துப்போன சோகத்தோட, அழுகைய வெளியவிடாம சேத்து சேத்து வச்சுட்டுருப்போம். நம்ம அம்மாவோ , இல்ல நம்மளச் சேந்தவங்களோ வந்து என்னடா ராசான்னு கேக்கும்போதுதான் அழுகை பொத்துக்கிட்டு வெடிச்சுக்கிளம்பும்.. அதை தெளிவ்வா கையாண்டுருப்பாரு நம்ம மேஸ்ட்ரோ!!
சரணத்துல,
"தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா"

இதல்லாம் அந்த குழந்தையப் பாக்காமலே.. இது கற்பனைதானே, அது மேலோட்டமா கடந்து போகட்டும்னு லைட்டா மூசிக்கோட பொழச்சுப்போங்கடான்னு விட்டுருப்பாப்ல .
இதுலலல்லாம் உசாரா வயலின இழுத்துருக்கவே மாட்டாரு.. ஏன்னா வயலின உள்ள கொண்டாந்தா அங்கேயே உடைஞ்சுடுவோம்னு அவருக்குத் தெரியும்.. விசும்பவிட்டு வேடிக்க பாப்பாரு.. கேடி!! (செல்லமாக)
" உன்னை நானிந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட"
தன்னோட கற்பனைங்கறது ஆசையா ட்ரான்ஸ்ஃபார்ம் ஆகுதுங்கறப்போ வெயிட்டேஜ் தரணும்ல..இங்க லைட்டா மோனோ வயலின இழுத்தாந்து , தம்பி அழவைக்கப்போறேன் அலர்ட்டாகிக்கன்னு எச்சரிச்சுருப்பாப்ல..
"விழிமூடாதோ......." ன்னு அந்த ஆசை ஏக்கமாகும்போது, ஜானகியம்மா குரலும் தழுதழுக்கும், அப்போஎடுப்பாப்ல பாருங்க வயலின் கோர்வைய, பொட்டுல அடிச்சாப்ல கண்ல தண்ணி கொட்டும், தொண்டை அடைக்கும். யோவ் பேமானி அழவச்சுட்டியேய்யான்னு திட்டத்தோணும். ஆழ்மனசுல உள்ள அத்தனை கடுப்பும் அந்த அழுகைல கரைஞ்சுடும். கலங்கினா , கண்ல உள்ள அழுக்கல்லாம் கரைஞ்சுபோறாப்ல, உள்ளத்தோட கடுப்பும் கலைஞ்சுபோயி இறுக்கமெல்லாம் தளர்ந்து ப்ரைட்டாகி கண்ணத்தொடச்சுட்டு உக்காரும்போது ராஜாவ நினைச்சு, "ச்சீ போய்யா, நீல்லாம் மனுசனேயில்ல" ன்னு ஒரு சலிப்புச்சிரிப்பு கண்டிப்பா வரும்.
வரவைப்பாரு.. ராஜா!!
அழனும்னா லிங்க்க அமுக்கவும்!!

வயலின வச்சே இவ்வளா வித்த ஒரே பாட்டுல.. அப்போ இன்னும் எத்தனையெத்தன .. எய்யாடீ.. இந்தாளு எமகாதகன்யா!!
மேல பகிரந்துட்ட விசயங்கள்லாம் எனக்கு மூசிக் தெரியும்னு காமிச்சுக்க செய்யலை. அறியாமைதான் பேரின்பம்ங்கறது இசைக்கும் பொருந்தும் .ராசய்யா போல டீச்சர் கிடைச்சா, எனக்கு எதுவுமே தெரியாதுங்கன்னு பெஞ்ச்மேல நின்னே திரும்பத்திரும்ப கேட்டு கேட்டு வாங்கி ஜோபில போட்டுக்கறதவிடவாங்க ஓரு ஆனந்தம் கிடைக்கப்போகுது.
"ஞானப்பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்.. ஐயனே என் ஐயனே"

மேலும் அலசுவோம்.

No comments:

Post a Comment