நண்பர்கள் கண்டிப்பா படிங்க. வழிபோக்கர்கள் வெட்டியா இருந்தா படிங்க!!
#இதல்லாம்_நடக்கற_காரியமா
இந்த வாரம் திருப்பதிக்கு சென்றிருந்தோம். மொட்டையடித்து திரும்பியதும், என் மகளிடம் எப்படிம்மா இருக்கு என்றதற்கு
"காமெடி பீசு மாதிரி இருக்கப்பா" என்றாள் சிரித்துக்கொண்டே.. எனது மனைவி முறைத்தபடி அப்படி எல்லாம் அப்பாவை சொல்லக்கூடாது என்று அதட்டிவிட்டு நகர்ந்தார். நானும் சிரித்துவிட்டு கடந்துவிட்டேன்.
ஏன் என் மகள் அப்படிச் சொன்னாள். வெளியே பேசிப்பழகிய வார்த்தைதான் என்றாலும். அந்தக் கேள்விக்கு அந்த பதில் எப்படிப் பொருந்தும். யோசித்தேன்.
அதற்கு நானே முழுப் பொறுப்பேற்கிறேன்!!
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில், எல்லாராலும் பாராட்டப்படக்கூடிய குணங்களுள் சர்காசமும் ஒன்றாகிப்போனது. தமிழில் வஞ்சப்புகழ்ச்சி என்பதே சர்காசம். ஒரு கேள்வி கேட்கப்பட்டால், அதற்கு மூன்று விதமாக பதில் சொல்லலாம்.. நார்மல் தமிழுக்கு போவோம்.
# ஆமாம், இல்லைன்னு நேரா பதில் சொல்லலாம்
# கேள்வி கேட்டவரை எதிர் கேள்வி கேட்டு மடக்கி பதில் சொல்லலாம்
# ஏன்டா கேட்டோம்னு கேட்டவரு வருத்தப்படறாப்ல, மொத்த லைட்டையும் அவர் பக்கம் திருப்பி விட்டு நக்கலா பதில் சொல்லி ஓடவிடலாம்.
#1
இந்த சர்காசம் இருக்கே சர்காசம்.. அது கிட்டத்தட்ட அந்த மூணாம் பாலினம்.. சாரி.. சாரி மூணாம் வகை. அந்த நேரத்துல சிரிக்க வச்சாலும், நிறைய காயப்படுத்திடுது. சினிமா அதுக்கு மூலக் காரணம்னாலும், அதை அப்படியே உள்வாங்கி பிரதிபலிக்கும் நானும் மோசமானவந்தான். ஒரு எஜ்ஜாம்பிள் சொல்லனும்னா, ரீசன்ட்டா , தேன் மிட்டாய் மூலமாக ஒரு நிகழ்வ சொல்றாப்ல நீளமான கட்டுரைய எழுதி ஒரு டோழர படிச்சுப்பாக்க சொன்னேன். படிக்காமலாச்சும் இருந்துருக்கலாம், படிஷ்டு வந்து கேட்டாங்களே ஒரு கேள்வி . "என்னா குரு, தேன்மிட்டாய் கிடைக்கலன்னா இவ்வளா பெரிய கட்டுரை??"
ப்பா.. செம்ம சர்காஷ்டிக் சார்!!
சபாஸ் சபாஸ்னு மனசுக்குள்ளையே அவங்கள வாழ்த்திட்டு நகர்ந்துட்டேன்!! இதை அவங்க படிச்சா தவறா எடுத்துக்க வேணாம். உள்ளத சொன்னேன்.
இன்னொருத்தர்ட்ட ஷேர் செஞ்சப்போ, "இல்ல குரு நீங்க கஷ்டப்பட்டு எழுதறிங்க. எனக்கு அனுப்பவேண்டாம், நான் அதை படிக்கறதேயில்ல. கண்டிப்பா உங்க ப்ளாக் ஒரு நாள் படிக்கனும்னு தோணும். அன்னைக்கு படிக்கறேன் " னு சொன்னாப்ல. சொன்னப்போ கஷ்டமா இருந்துச்சு. ஆனா அதுக்கப்புறம், அவரை நிறையவே பிடிச்சுப்போச்சு. சூப்பர்ல?? மனசுல உள்ளத வெளிப்படையா அழகா சொல்லிடறது. அதான் இயல்பு..!!
சர்காசத்தையும் மடக்கி பதில் சொல்லி, கேட்டவங்கள தெறிக்கவிடறப்போ பெருமையாதான் இருந்துச்சு எனக்கு. இப்போ யோசிச்சா, ஏன்டா அப்படி செய்தோம்னு இருக்கு. இனி அப்படி செய்ய வேண்டாம்னு தோணுது. சாத்தியக்கூறு உண்டா இல்லையான்னு தெரிஞ்சுக்க ஜோசியக்காரனப் பாக்கனும்.
இனியாவது, கேள்விகளுக்கு நேர்பட பதில் பேசனும்னு ஆசையா இருக்குது. பழைய வெகுளித்தனம் திரும்ப வருமா, டவுட்டுதான்.
#2
2015ல, மீமீ அதிகம் போட்டப்போ, செம கெத்தா இருந்துச்சு. மக்கள் பாத்துட்டு நல்லாருக்குன்னு சொல்லி , சிரிக்கவும் செய்தாங்க. யோசிச்சா, என் ஃபீலிங்க அதாது எனக்கே உண்டான ப்ரீசியஸ் உணர்வுகள யாரோ ஒருத்தனோட முகத்து மூலமா காமிச்சு மீமீ , ஃபோட்டோ கமண்ட் பதில் சொல்லிருக்கேன். ஒரு டைம்ல கூடப்பழகற ஆட்கள பாத்தா கூட மீமீ டெம்ப்ளேட் போல தெரிய ஆரம்பிச்சுடுச்சு. கான்செப்ட் சிக்கினா கை நமநமன்னும். கருமத்த ஒழிக்கனும்னு ஆசைப்பட்டேன்.. பாட்டுல கவனம் செலுத்தினேன். இப்ப அந்த மீமீ அடிக்ஷன் போய்டுச்சு, போடறதேயில்ல. ஃபோட்டோ கமண்டுக அப்பொப்பொ. அதையும் விடனும். 50% வாழ்க்கைய மொத்தமா மொபைலுக்கு கொடுக்கறதுன்னு ஆகிடுச்சு. அதையாவது நானாகவே கொடுக்கறேன். எதுக்கு எவன் மூஞ்சியோ வாடகைக்கு எடுத்து நான் கொட்டாவி விடனும்னேன்.
#3
ஜஙகிள் புக் படத்துல பல மிருகங்கள காமிச்சுருப்பாங்க. அதுக எல்லாமே தண்ணி குடிக்க ஒரு இடத்துல கூடும் (peace rock). ஒரே ஒரு ரூல். எந்த மிருகமும், எதையும் துன்புறுத்தக்கூடாது. வந்த வேலைய பாத்துட்டு போயிடனும்னு. முகநூலும் கிட்டத்தட்ட அப்படித்தான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபண்டமென்டல் கேரக்டர் . இது புரியாம நான் சிலபேரோட கேரக்டர எனக்குள்ள எடுத்துக்கப் பாத்துருக்கேன். சனியன் நல்லதா இருந்தாலும் பரால்ல.. ஒருத்தரப் பாத்து , அதிகமா சிரிச்சா நம்மள பெரிய மனுஷனா நினைக்கமாட்டாங்கன்னு ஒரு கேவலமான த்தாட் ஒன்னு வந்துடுச்சு. அதாது எலியப்பாத்து எருமமாடு வால் நீளமா இல்லைன்னு வருத்தப்பட்டாப்ல. ச்சை.. எவ்வளோ இடங்கள்ல சிரிப்பு வந்தும் காட்டிக்காம இருந்துருக்கேன். அது கெத்துன்னு நினைச்சேன். கண்டிப்பா இல்ல. அது மொக்கையோ மொக்கைத்தனம். சிரிச்சா என்னா கேடு. இனி ஜோக்குகள ரசிக்கனும், நிறைய சிரிக்கனும். எவன் எக்கேடு கெட்டா எனக்கென்னங்கறாப்ல சிரிக்கனும். அதும் சிரிக்காத சுத்தற ஆட்கள் கண்ல படறாப்ல விழுந்து விழுந்து சிரிக்கனும்.
மைண்ட ஃப்ரீயா வச்சுக்கனும். இது ஒரு ஆசை.
இதெல்லாமே ஆசைங்கதான். நிறைவேத்தனும்னு நினைக்கறேன். அதுக்கு உங்க எல்லாரோட உதவியும் வேணும். எனக்குன்னு இருக்கற நண்பர்கள் இதைப் படிச்சுருப்பாங்கன்னு நம்பறேன். வாழ்க பாரதம்!!
2017 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!