#குருபார்வை: 9
#காதல்நோய்!!😂😂
நம்ம வடிவேல் ஒரு படத்துல, மொட்டை ஒருத்தர் தலைல கைய வச்சுட்டு, அதை எடுக்க முடியாம (கைய எடுத்தா கடிச்சுடுவார்) மாசக்கணக்கா சுத்துவார்.
நானும் கடந்த 4 நாட்களா, ஒரு பாட்டை இப்படி பிடிச்சுட்டே சுத்திட்டுருக்கேன். விட முடியலை. ச்சை!!
(Flashback)
அஞ்சு நாளுக்கு முன்ன, ஒரு சமகால சங்கீத ராட்ஷசி (நம்ம ப்ரண்டுதான் கோச்சுக்க மாட்டாங்க) 'எனக்கு பிடித்த பாடல்' (Julie Ganapathy) பாட்டை பாடி அப்லோடு செய்துருந்தாங்க. அவங்க பாடறதப்பத்தி சொல்ல ஆரம்பிச்சா, நாலு நாள் நான் அதைப்பத்தி மட்டுமே பேசவேண்டி வரும் என்பதால், பாட்டை பத்தி மட்டுமே பொலம்பிக்கறேன்.
இத்தன நாளு இந்தப்பாட்ட ஏய்யா தொடாம விட்டோம் (இந்த ஃபர்னிச்சர ஏன் உடைக்காம விட்டோம்னும் புரிஞ்சுக்கலாம்) அப்படின்னு வருத்தப்பட்டு, சரி ஒரு முறை நல்லா கேப்போம்னு DUB ப்ளேயர்ல ரசிச்சு கேக்க ஆரம்பிச்சதும் போதும்.. இப்ப வரை 100 தபா கேட்ருப்பேன்..
இப்ப ட்ரைவிங்ல, என்னோட கூட வந்த ரெண்டு பேரு செம காண்டாகி, ' இறக்கி விட்றா ஷேர் ஆட்டோல போறேன்னு' சொல்ற அளவு ரிப்பீட்டடா கார்ல ஓடிருக்கு.
விட முடியலை.. இன்னும் ப்ளேயர் லூப்ல ஓடிட்டு தான் இருக்கு.. சட்டைய கிழிச்சுக்காம இருக்கேன். அதான் பாக்கி!!
----
ராஜா சார் லெவலுக்கு ரொம்பவே சுமாரான பாடல், இல்லைங்கல.. ஐயோ ஒரு நிமிஷம்..
ராஜா சார் பத்தி பேச பயமா இருக்கு. காப்பிரைட்ஸ் பணம் கட்ட காசு இல்லை என்பதால்..
Jokes apart.
Bass guitar என்பதோட முழு பயன்திறன் இந்தப்பாட்ல புரிஞ்சுக்க முடியுது. பாடலோட முதல் சரணத்துக்கு முன்னாடி வர்ற குட்டி வயலின் பிட்ட வச்சே பத்து பாட்டு போடலாம்.. அப்புறமா, (நிறைய பேரு நோட் பண்ணாங்களா தெர்ல) ஒரு குட்டி தபேலா கூடவே ஓடிவருது.. ப்பா.. க்ளாஸ்!!
ராஜா மனுஷனே இல்ல.. மரிஹ்வானா (Marijuana) இப்படி அடிக்டாக்கி ஆடவைக்கிறியே ராசா.. உங்களுக்கு சாவே வரக்கூடாது! இந்த சாமானியனோட வேண்டுதல்!!
----
ஷ்ரேயா தனி வெர்ஷன், விஜய் ஏசுதாசோட டூயட் வெர்ஷன்னு ரெண்டு இருக்கு.. எனக்கு ரொம்ப பிடிச்சது ஷ்ரேயா தனித்தவில்தான்..
அந்தக்கா சக்கரைல தேனக்கலக்கி, ஜெல்லி மென்னுட்டே பாடும்போல.. என்ன ஒரு தித்திப்பு. யம்மீ!!
'நீ தூரப்போகிறாய்' ல ஏக்கம்..
'வானத்தில் பறக்கிறேன், மோகத்தில் மிதக்கிறேன்' சங்கதிகள்.. ஆத்தீ!! (ROFL Trivia: அந்த சங்கதிகள நான் முயற்சி பண்ணப்போ, மனசுல தோணிச்சு.. 'நீ அமெரிக்காவுக்கே திரும்பி போய்டு சிவாஜி)
ம்ம்.. ஷ்ரேயா ... ம்ம்.. ஏக்கப்பெருமூச்சு விடற ஸ்மைலி இல்லையே!!
-----
'நீர்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்,
நீ தொடும் இடங்களில்
வீணையின் தேன்ஸ்வரம்'
'மேகம்போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைகிறாய்'
இதல்லாம் படிக்கும்போதே, இது நா.மு தான்னு தெரியவருது. கஷ்டமான சூழலக்கூட ஈசியா express பண்ற அழகான கவிஞன் இன்னும் கொஞ்ச காலம் இருந்துருக்கலாம்யா நீ.. ப்ச்.. என்னமோ போ!!
---
BaluMahendra இந்த காம்போவ சேத்துவச்சு வேலை வாங்கிருக்கிங்கன்னா, இவங்களத்தாண்டின ஒரு ரசிகனா இல்லைன்னா முடியுமா.. பெரிய ரசிகன். கலா ரசிகன். RIP சார்!!
---
கடைசியா,இந்தப்பாட்டை எனக்கு ஞாபகப்படுத்தின அந்த பாடகி.
எவ்வளவோ பேரு பாடறாங்க, அவங்க பாடறதக்கேட்டு கை தட்டிட்டு போறதோட சரி. அந்தப்பாடகி எவ்வளவு அழகா பாடி இருந்தா, நான் இப்படி பித்துப்பிடிச்சு சுத்திட்டுருப்பேன். சரியான அங்கீகாரம் கிடைக்கனும்னு நான் வேண்டிக்கற பல பேர்ல அவங்களும் ஒன்னு. வாழ்நாள் பூரா நான் சந்தோஷப்பட்டுக்கற விஷயத்துல ஒன்னு அவங்களோட சேர்ந்து நானும் சில பாட்டு பாடிருக்கேன். எங்க காம்போ, எவர் சில்வர் பாத்திரத்துல ஈயம் பூசின மாதிரி இருந்தாலும், அவங்க நான் பாடறது நல்லா இருக்குன்னு தான் சொல்வாங்க. But I always use to say 'I'm no match for her brilliance' She is a divine singer. Wanna hear more. Keep it coming!!
Wish her goodluck buddies
நன்னாரு
---
ஆர அமர இந்தப்பாட்டை கேட்கவும்.. Feel it. And Deal with it 😂
#குரு