Thursday, October 18, 2018

!!அழகான வரம்!!

ஆகச்சிறந்த பிறந்த நாள் பரிசு!! 😍😍

"Congrats நண்பா!

ரொம்ப சந்தோஷம், பையனா பொண்ணா? வாவ். பொண்ணா? ஆஹா, lucky guys u are. wife எப்படி இருக்காங்க? குழந்தை எப்படி இருக்கா.."

"சூப்பர். இதுல என் பங்கு ஒன்னுமே இல்ல, அதல்லாம் மனசுதான் நண்பா!! எந்த பிரச்சனையும் இல்ல. முதல்ல குழந்தைய வீட்டுக்கு அழைச்சுட்டு வாங்க. என்ன பண்ணலாம்னு சொல்றேன்."

"ஓ!! ரொம்ப சந்தோஷம்!!😍😍"

(இரண்டு நிமிட இடைவெளி)
"உங்க அம்மாவ பாக்கனுமே நண்பா!!
சீக்கிரமே வரேன்.  சந்தோஷமா இருங்க!! வாழ்த்துக்கள்."

"புரில நண்பா!! மித்ரா?"

கண்ணீர்!!

குழப்பமா இருக்குல்ல?

ரெண்டு நாள் முன்னே வந்த அழைப்பு இது. என்னன்னு சொல்றேன்.!!

மித்ரன் எங்களோட வர்றதுக்கு முன்னே, அவன் வர்றதுக்காக official documents submit செய்ய, police clearance and NOC வாங்க commissioner office போயிருந்த சமயம். அங்கே திடீர்னு DD எடுக்கனும்னு சொல்ல, பக்கத்துல இருந்த  வங்கியில DD challan வாங்கி fill பண்ணிட்டுருந்தேன்.
அதை கையாண்ட வங்கி அதிகாரி, என்ன விஷயம்னு கேட்டப்போ, விஷயத்த சொன்னேன். ஒரு நிமிஷம் உக்காருங்க, வரேன்னு சொல்லிட்டு ஒரு தனி ரூம காட்டினார். அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்தவர், "

"சார் தவறா எடுத்துக்காதிங்க,
என் மகனுக்கு கல்யாணம் ஆகி 6 வருஷம் ஆச்சு, குழந்தை இல்ல.
உங்க DD requestல for child adoptionனு இருந்துது.
இந்த தத்தெடுக்கறது பத்தி தெரிஞ்சுக்கலாம்னுதான் உங்கள இருக்க சொன்னேன். எல்லாரும் பயமுறுத்தறாங்க. நாங்க ப்ராமணா. அதுபோக என் மனைவிக்கு இதுல உடன்பாடு இல்ல. biological kid தான் பேரக்குழதந்தையா வேணும்னு ஒத்தக்கால்ல நிக்கறா!! எனக்கு என்ன பண்ணறது தெரியலை. நீங்க ரெண்டாவது குழந்தைதானே எடுக்கறிங்க? கொஞ்சம் இதை பத்தி சொல்ல முடியுமா?"!!

கிட்டத்தட்ட நாப்பது நிமிஷம் இந்த CARA பத்தியும், தத்தெடுத்தல் பத்தியும் விளக்கி சொன்ன அப்புறமா, என்னோட நம்பர் கேட்டு வாங்கிட்டார். மறுநாளே அவர் மகன் என்கிட்ட பேசினார். நீண்ட உரையாடலுக்கு அப்புறமா, தன் மனைவிக்கு சம்மதம்தான்னும், அவங்க அம்மாவ பேச சொல்றேன்னும் சொன்னார். நானே நேர்ல வரேன்னு சொல்லிட்டு, 10 நாள் கழிச்சு அவங்கள நேர்ல சந்திச்சு பேசினேன். 1 மணி நேர உரையாடலுக்கு அப்புறமா, உடன்பாடு இல்லன்னுட்டாங்க!!

கிளம்பும்போது ஒரு விஷயம் அவர்கிட்ட சொல்லிட்டு வந்தேன்.
"நண்பா, உங்க அம்மாவ ஒரே ஒருநாள் ஆசிரம குழந்தைங்களோட lunch சாப்பிட வைங்க. சும்மா எதுமே சொல்லாம அழைச்சுட்டு போங்க. பாக்கலாம்!"

இது நடந்து 2 வருஷம் ஆச்சு.. நடூல அப்பப்போ வாட்சப்புல hi /bye அவ்வளவுதான்!!

நேத்தைக்கு காலைல
அவர் அழைப்பு!

"நண்பா, எங்களுக்கு குழந்தை allot ஆகியிருக்கு.. பெண் குழந்தை. Bengalurல. போயி பாத்துட்டு வந்தோம். ரொம்ப பிடிச்சு போச்சுது.
நீங்க பேசிட்டு போன அப்புறமா, அம்மாவ orphanages கூட்டிட்டு போனேன் நண்பா. ரெண்டு மூணு முறை, மனைவி பிறந்த நாள், அவங்க கல்யாண நாள், எல்லாத்துக்கும். கொஞ்சம் கொஞ்சமா ஒத்துக்கிட்டாங்க. உடனே register பண்ணிட்டேன். கிட்டத்தட்ட 1 வருஷம் நண்பா. கிடைச்சுது பொக்கிஷம்னார்.

என் கண்ல லேசா தண்ணி எட்டி பாத்துது..  கேட்டேன்

"நண்பா குழந்தை reg பண்ணினா atleast 1.5 வருஷம் ஆகுமே.. எப்படி இவ்வளவு சீக்கிரமா?"

"அதுவா பாலு, அவ special child. ரெண்டு கால்களும் பிறவீலயே செயல்படலை (Paraplegia) . அதான் சீக்கி்ரமே." கொஞ்சம் கூட தளறாம அவர் பேச,

கொஞ்ச நேரம் பேச்சு வரலை எனக்கு.

அவரே தொடர்ந்தார்,

"எடுக்கனும்னு ஆகிடுச்சுடா, இது போல மத்தவா எடுக்காத குழந்தையா பாத்து ( with physical disability) எடு. நான் ஆத்துல சும்மாதானே இருக்கேன், அப்பாவும் ரிட்டயர் ஆகிடுவார். எங்களுக்கு அந்த குழந்தைய வளர்க்க தெரியும். நம்ம போல well off மக்களாலதானே அது போல குழந்தேள நன்னா பாத்துக்க முடியும்" அப்படின்னு அம்மா சொன்னாங்க நண்பா.. அதான் register பண்ணும்போதே with physical disability வேணும்னு கேட்டுருந்தேன். உடனே அமைஞ்சுது."

எனக்கு அவ்வளவு நேரம் கண்ல நின்னுட்டு இருந்த தண்ணி, சட்டுன்னு வழிய, அதை காமிச்சுக்காம,

"என் குடும்பத்துக்கப்புறமா, இத உங்க கிட்டதான் முதல்ல சொல்றேன். "மித்ரா" வீட்டுக்கு வந்த உடனே உங்களுக்கு சொல்றேன் வாங்க. அம்மாவும் உங்கள பாக்கனும் சொன்னாங்க! ரொம்ப thanks நண்பா.

கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டிருந்த நான்
" இருங்க இருங்க, மித்ராவா?"

ஆமாம்!! உங்க பையன் பேரு மித்ரன்தானே!! அந்த ஞாபகமா :)

நெகிழ்ச்சி!!

- குரு